Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரண்டாம் நாள் நடைபவனி!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் கிளிநொச்சியை நோக்கிய இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று (புதன்கிழமை) அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுர சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர்.

யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான நடைபயணம் நேற்று பளையை சென்றடைந்தது.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கைதிகள் விவகாரத்தை சட்ட விவகாரமாக அணுக கூடாது எனவும் மாணவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts