பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 31 பேருக்கும், கணக்காய்வு உத்தியோகத்தர்கள் 02 பேருக்கும், பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள் 08 பேருக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
வட மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.