அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று நிலையில் ஆளுநர்கள் தமது பதவி விலகலை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனாதிபதி புதிதாக பதவியேற்றுள்ள நிலையில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிக்க வகையில் ஜனாதிபதி செயலகத்தால் கோரப்பட்டதற்கு அமைய இந்த பதவி விலகலை 9 மாகாணங்களின் ஆளுநர்களும் அறிவித்துள்ளனர்.