Ad Widget

அடுத்த மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைப்பு

கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, அடுத்த மாதமளவில் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

புதிதாக மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழக மாணவர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு செயற்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், பெரும்பாலான மாணவர்கள் அமைதியான முறையில் தங்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய மாணவர்களுக்கான பாடத் தெரிவுகளை மாணவர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

Related Posts