Ad Widget

அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தியாவின் தங்க மனிதர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே.

Punes-Gold-Man-Beaten-To-Death-In-Front-Of-Son_SECVPF

புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர் இவர், சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்.ரூ.1.2 கோடி செலவில் 3.2 கிலோ தங்கத்தை உருக்கி, அதை சட்டையாக அணிந்து 2013-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்றார். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களிலும் ஊடகத்திலும் வைரலாக பரவியதால், இந்தியா முழுவதும் பரவலாக தத்தா புகே அறியப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அங்குள்ள கும்பலால், தனது சொந்த மகன் கண்முண்ணே புகே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் மகனுடன் திறந்த வெளி மைதானம் ஒன்றிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது 12 பேர் அடங்கிய கும்பல் புகே மீது கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண பரிவர்த்தனை தொடர்பான பிரச்சினையில் தொழிலதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts