Ad Widget

அச்சுவேலியில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் -அச்சுவேலி மகிழடி பகுதியில் அயல் வீட்டுக்கு வந்த ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சந்தேகநபரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விருந்திற்கு வந்திருந்த ஒருவரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து வாளினால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து வாள் வெட்டிற்கு இலக்கான நபரை வீட்டில் இருந்தோர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபருக்கும் வாள்வெட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையிலிருந்த தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts