யுத்தத்தின் பின்னர் அகதிகளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தங்கம் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்த எவ்வித தகவல்களும் இல்லையென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சமடைந்த மக்களின் சொத்துக்கள் எங்கேனும் வைப்பீடு செய்யப்பட்டதா என, நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் வாசுதேவ நாணயக்கார கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த போதே, அமைச்சர் சுவாமிநாதன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
மேலும், யுத்தத்துக்கு பின்னர் அகதிகளாக்கப்பட்டவர்கள் வவுனியா மாவட்டத்திலேயே தங்கவைக்கப்பட்டதாகவும், இம்மக்களது சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்த எவ்வித தகவல்களும் வவுனியா பிரதேச செயலகத்திடம் இல்லை என்றும் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.