வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் கடைக்கு தீ வைப்பு

வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுடன் இணைந்த கடைக்கு இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டுள்ளது.

DSC_0012(3)

அளவெட்டி அருணோதயா ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபை உறுப்பினர் கந்தசாமி மயூரதன் என்பவரின் கடைக்கே தீ வைக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழுவொன்று அதிகாலை வீட்டின் நுழைவாயில் கேற்றினை திறந்து கடைக்கு தீ மூட்டியுள்ளனர்.

இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்த சத்தத்தினை கேட்டு வெளியில் வந்து பார்த்த போது கடை எரிந்துகொண்டிருப்பதனை அவதானித்ததாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார். இந்த தீயினால் கடையிலிருந்த ஆவணங்கள் பல எரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடாபில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts