Ad Widget

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழை; மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்சியாக பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் மழை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்தால், யாழ். பொம்மைவெளி பகுதியை சேர்ந்த மக்கள் முழுமையாக இடம்பெயரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு மக்கள் உள்ளாவதாக தெரியவருகின்றது

முழுமையாக பண்ணை சிறுகடலில் கடற்றொழிலை நம்பியிருக்கும் இந்த குடும்பங்கள் மிகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts