Ad Widget

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வேகமாகச் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கிணற்றுக்கட்டுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோவிலுக்கு முன்பாகவுள்ள கிணற்றடியில் இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சோந்த வின்சன் வின்ஐக்சன் (வயது 25) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.

இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மரண விசாரணை அதிகாரி நமசவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts