Ad Widget

மொஹமட் ஷியாம் கொலை: வாஸ் உட்பட 6 பேருக்கு மரண தண்டனை

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை கொழும்பு மேல்நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது

Related Posts