Ad Widget

பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை – வைரமுத்து

எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இணையதளத்தில் வெளியாகியுள்ள அந்த பாடலின் வரிகளை கண்டித்து இருவர் மீது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகி வருகிறது. இந்த நிலையில் இந்த பாடல் சர்ச்சை குறித்து கோவையில் கவிஞர் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ’நான் அந்த பாடலை இதுவரை கேட்கவில்லை. பாடலை கேட்காத நிலையில் என்னால் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது.’ என்றார். இருப்பினும் ’எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை என்று வலியுறுத்திய வைரமுத்து, அவர்கள் தங்களுக்கென்று சில எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். என்றார்.

மேலும், கருத்து ஆழமுள்ள பாடல்கள் காலப்போக்கில் குறைந்து வருவதாகவும் வைரமுத்து கவலை தெரிவித்தார்.

Related Posts