Ad Widget

சேயா கொலையைக் கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி சேயா பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று யாழ். மத்திய பேரூந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

Seya-Jaffna-

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.

இன்று எமது நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் மாற்றங்கள் இது போன்ற குற்றச் செயல்களுக்கும், வன்முறைகளுக்கும் பெருகி வரக் காரணமாக உள்ளன என்று கோசமிட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று நாட்டில் பல பாகங்களில் இப்படியான சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளே இடம்பெறுகின்றன. “இவ்வாறானவன்முறைகளுக்கு உந்துதலாக உள்ள போதைப் பொருட்களை தடை செய்யவும்”, “பாலியல் துஷ்பிரயோகங்களுக்குத் தனி நீதிமன்றம் மூலம் தண்டனைகள் வழங்க வேண்டும்” போன்ற கோசங்களை எழுப்பி போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினா்.

Related Posts