Ad Widget

சரத்குமார், ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த சூர்யா

நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பாண்டவர் அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

நடிகர் சூர்யா நேற்று தன் வாழ்த்தை பாண்டவர் அணிக்கு தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், ராதிகா, சரத்குமார், ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

surya-anjaan

ஏனெனில் சரத்குமார் பிரச்சாரத்தின் போது சிவக்குமார் அவர்களை திட்டியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க தேர் தலில் வெற்றி பெற்ற வர்களுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தத் தேர்தல் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரசாரத்தில், வருந்த தக்க பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக் கும்போது செய்த ’கடமை கள்’, ’உதவிகளாக’ சித்தரிக் கப்பட்டன.

’நடிகர்கள் ஒரே குடும்பம்’ என்று சொல்லிக் கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர்.

விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால், மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது ’பண்பு மறந்து, வார்த்தை தடித்து’ அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழல் இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.

வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு, சக கலைஞனாக என்னுடைய வேண்டுகோள் இவை. கடமைகளை, உதவிகளாக நினைத்து செய்யாதீர்கள்.

மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள். அனைத்து கலைஞர்களுக்கும் நன்மை கிடைக்க பாடுபடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறை வேற்றுங்கள்.

பகைமை விரட்டி, ஒற்றுமைக்கு வித்திடுங்கள். சக கலைஞர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே, உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத் துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் சூர்யா. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts