தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.
மேலும் குறித்த சந்திப்பின்போது சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.