ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி வந்திருந்த நிலையில், அவரின் வருகையை எதிர்த்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ். விஜயம் செய்த ஜனாதிபதி, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சார்பில் மூவரை தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நம்பிக்கையுடன் ஜனாதிபதியை காண சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உறவுகளுக்கு அழைப்பு விடுத்துவிட்டு அவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி நிகழ்வை நிறைவுசெய்து அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாட்டால் கொதித்தெழுந்துள்ள உறவுகள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.