Ad Widget

போதை மிகுந்த நாடாக மாற்ற நல்லாட்சி முயற்சிக்கிறதா? சுகிர்தன் கேள்வி

போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் விலை குறைப்பு தீர்மானத்தை மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பியர் விலை குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நல்லாட்சி அரசாங்கம் போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்தது. உடனடியாகவே மதுபானம் மற்றும் சிகரட் விலைகளை உயர்த்தியது.

தற்போது 2018ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பியர் விலையை குறைத்துள்ளது. இதன் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்தின் போதையற்ற நாடு கோஷம் போதையான நாடாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே அரசாங்கம் பியர் விலை குறைப்பு தொடர்பில் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும். மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என நம்பியிருந்த நிலையில் பியர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பியர் விலை குறைப்பானது வடகிழக்கு மாகாணங்களில் பாரியளவு தாக்கத்தை உண்டாக்கும். பியர் விலை குறைப்புக்கு நிதி அமைச்சர் கூறியிருக்கும் காரணம் சிரிப்பை உண்டாக்குவதாக உள்ளது. சட்டவிரோத மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்த பியர் விலையை குறைப்பது தீர்வாக அமையாது.

சட்டவிரோத மதுனா பாவனையை கட்டுப்படுத்த இறுக்கமான சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டுமே தவிர பியர் விலையை குறைத்தால் சட்டவி ரோத மதுபான உற்பத்தி குறையாது.

அதேபோல் பியர் விலை குறைப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளும் எதிரான தங்கள் கருத்துக்களை கூறவேண்டும்” என்றார்

Related Posts