உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் 08ம் திகதி முதல்

இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற உள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர்.

இதேவேளை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நாடு பூராகவுமுள்ள 3014 பரீட்சை நிலையங்களில் இடம்பெற உள்ளதுடன், 356728 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்ற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Related Posts