Ad Widget

‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’

“கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறோம்.

‘அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு, இராணுவம் தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கான அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சு இன்னமும் வழங்கவில்லை. ஆகையினால், அந்த அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts