வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார்.
வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை என, இதன்போது சந்தியா எக்னலிகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அரசாங்கம் விரைவில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.