வவுனியாவில் பாடசாலை சென்ற 13வயது சிறுவனை காணவில்லை!!

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 13வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

vavuniya-nissing-boy-

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் 13வயது பாடசாலை சிறுவன் 25.04.2016 பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

25.04.2016 குறித்த சிறுவன் தான் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்ல போவதாவும் தாயரிடம் தெரிவித்துள்ளார். மகனை பாடசாலைக்கு செல்லும் படி கூறிவிட்டு மாலை தாயார் விடு வந்த போழுதும் மகன் வீடு திரும்பவில்லை என தாயார் தெரிவித்தார்.

குறித்த பாடசாலை சிறுவனை கண்டால் உடனே தொடர்பு கொள்ளவும்

வடிவேல் ராஜேஸ்வரி
077 – 2101553
077 – 2510154
077 – 0545615

Related Posts