Ad Widget

பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மீது, பஸ்தியன் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை (25) மதியம் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பஸ்ஸில் இருந்த பயணிகள், வேறு பஸ் மூலம் பயணத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டதுடன், தாக்குதலுக்குள்ளான பஸ்ஸை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts