காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது.
இந்தப் பாதைச் சேவையானது, நாளொன்றுக்கு 6 தடவைகள் என்ற ரீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால், இலவசமாக நடத்தப்பட்டது.
இதன் மூலம் பயணிகள், மோடடார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியவற்றை கொண்டுச் செல்லக்கூடியதாக இருந்தது. எனினும் கடந்த மார்ச் மாதம் முதலாவது வாரம் தொடக்கம் இந்தப் பாதை பழுதடைந்தது.
இதனால், இரண்டு இடங்களுக்கும் கட்டண அடிப்படையிலான படகு சேவை ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பழுதடைந்த பாதையை திருத்தம் செய்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், அதனை மீண்டும் சேவையில் இணைத்துள்ளனர்.