Ad Widget

பொலிஸ் பாதுகாப்புக் கேட்கிறார் யாழ். அரச அதிபர்!

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அத்தியட்சகரிடம், மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்திற்கும் கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலக அறைக்கும் நிரந்தரமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச அதிபரின் அலுவலக அறை என்பனவற்றினை முன் அறிவித்தல் இன்றி பூட்டுவதனால் சில இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை காணி அபகரிப்பைத் தடுக்க வேண்டும் என மாவட்ட அரச அதிபரிடம் மனு ஒன்றினைக் கையளித்த ஆர்ப்பாட்டக்கார்ர்கள் திடீரென அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், அரச அதிபரின் அலுவலகத்தினை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts