யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான நவரட்ணராஜா இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சுகவீனமுற்றிருந்தார். இந்நிலையில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகிச்சை பெற யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை இவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற இருந்த நிலையில் அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு வடக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள், மக்கள் என அனைவரும் தமது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.