இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில், வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புச் சொல்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாவகச்சேரி அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்றது.
அமர்வு முடிவடைந்தப் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் தேவை எனில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், சர்வதேச அவதானிப்பாளர்கள் தேவை எனில் கேட்கலாம். ஆனால், எமது மக்களுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது என்றார்.