வவுனியாவை சேர்ந்த 14 வயது சிறுமி க.ஹரிஸ்ணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட மாகாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேநேரம் யாழ்.பல்கலை சமூகத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பில் பல்வேறு தரப்புக்களும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.