Ad Widget

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் மன்னார் ஆயர்!

சிங்கப்பூரில் இருந்து சிகிச்சை முடிந்து நேற்று பிற்பகல் மன்னாருக்கு வந்தார் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை.

mannar ayar20151209

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர் வண. இராயப்பு ஜோசப்புக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று புதன்கிழமை காலை அவர் பண்டாரநாயக்க விமான வந்தடைந்தார்.

அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலமாக தள்ளாடி விமான நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து ஆயரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்ரடர் சோசை ,மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் வரவேற்று விசேட வாகனத்தில் ஆயர் இல்லத்துக்கு அழைத்து வந்தனர்.

Related Posts