பருத்துறையிலிருந்து – அக்கரைப்பற்றுக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, சனிக்கிழமை (22) தெரிவித்தார்.
இந்த பஸ் சேவை வெள்ளிக்கிழமை (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் காலை 9 மணிக்கு பருத்துறை பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும் பஸ் நெல்லியடி, கொடிகாமம், ஊடாக வவுனியா பேருந்து நிலையத்திற்கு சென்று தொடர்ந்து அங்கிருந்து பொலனறுவை, மட்டக்களப்பு ஊடாக அக்கரைப்பற்றை மாலை 6 மணிக்கு சென்றடையவுள்ளது.
அதேபோல அக்கரைப்பற்றிலிருந்து யாழ். நோக்கி மறுநாள் காலை 11 மணிக்கு இந்த பேருந்து தனது சேவையை ஆரம்பிக்கின்றது எனவும் இதற்கான ஒரு வழித்தடக் கட்டணம் 600 ரூபாய் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.