தேசிய மீனவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 .00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகள், சர்வ மதத் தலைவர்கள், மக்கள் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், வடகிழக்கு மற்றும் தென்பகுதி பொதுமக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து யாழ் மாவட்ட செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.