ஆலயங்களுக்குள் மொபைல்கள் கொண்டு செல்ல தடை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 முக்கியக் ஆலயங்களுக்குள் ஸ்மார்ட் மொபைல்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தடை விதித்துள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்துள்ளன.

ஸ்மார்ட் மொபைல்களை எடுத்து வரும் பக்தர்கள் அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒப்படைத்து, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேவேளையில், கமரா இல்லாத மொபைல்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்திற்குள் வழிகாட்டுதல்களை மீறிப் புகைப்படங்கள் எடுப்பது, ‘ரீல்ஸ்’ (reels) மற்றும் காணொளிகளைப் பதிவு செய்வது போன்ற செயல்களில் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள் – ஈடுபடுவது குறித்த கவலைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts