இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களுக்கான அனுபவப் பகிர்வும் பட்டறையும் (Experience Based Lecture) நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெனாண்டோ கலந்து கொண்டார்.

இதற்கமைய, இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையின் போது, கடற்படை வீரர்களின் கடற்படை மற்றும் சிவில் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் இலக்குகளை அடைவதற்குத் தேவையான பெறுமதிமிக்க கருத்துக்களை, குமார் சங்கக்கார அவர்கள் தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களின் அடிப்படையில் கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடியதுடன், கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு பட்டறையொன்றும் நடத்தப்பட்டது.
அத்துடன், இதற்கு இணையாக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியையும் பார்வையிடுவதற்காக குமார் சங்கக்கார கலந்து கொண்டார்.
இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் குமார் சங்கக்காரவிற்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டடது.
கடற்படை துணைத் தலைமை அதிகாரியும் கிழக்குப் பிராந்திய கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே உட்பட கிழக்குப் பிராந்திய கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சி பெறும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட, கனிஷ்ட, கடற்படை வீரர்கள் பலர் இந்த அனுபவப் பகிர்வு விரிவுரை மற்றும் பட்டறையில் கலந்துகொண்டனர்.