இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததன் காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மீகஸ்தெனியவின் இடமாற்ற விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை இதற்குத் தீர்வு காணத் தவறியுள்ளதாக அச்சங்கம் குறிப்பிடுகிறது.