மானிப்பாயில் வாகனங்களுக்கு தீ வைத்த கும்பல்!

முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பலொன்று மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (13) அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த கும்பல், வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளது.

அதன் பின்னர், அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அங்கிருந்து கொண்டு சென்று, சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதியில் மாசியப்பிட்டி சந்தியில் வீதியின் நடுவில் வாகனத்தை நிறுத்தி, தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts