Ad Widget

யாழில் சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு வலியுறுத்தி போராட்டம்

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி பகுதியில் சமையல் எரிவாயு விநியோகிக்க வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பரமேஸ்வரா சந்தி பகுதியில் உள்ள லிட்ரோ முகவர் நிலையத்தில் கடந்த சில நாட்களாக எரிவாயு வழங்கப்படுவதாக கூறிவந்தாலும் யாருக்கும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த எரிவாயு முகவர் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் சென்றவர்கள் எரிவாயு கிடைக்காத நிலையில் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த முகவர் நிலையத்தில் எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த கோப்பாய் பொலிசார் குறித்த முகவர் நிலையத்தை சோதனையிட்ட போது அங்கு எரிவாயு சிலிண்டர்கள் எவையும் இல்லாதிருந்தது.

எரிவாயு சிலிண்டர் இருப்பில் இருக்கும் போது வழங்க மறுக்கப்பட்டால் தாம் தலையிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கோப்பாய் பொலிஸார் வாக்குறுதிளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Related Posts