யாழில் பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை ; பொலிஸார் விசாரணை

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவிகளுக்கு கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர் ஒருவர், மாணவிகளுடன் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல், பாலியல்...

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

வைகாசி 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வாரிக்கொள்கை மற்றும் அதற்கு எதிரான ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக முன்னதாகவும்...

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை!!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற...

வடமாகாணத்தில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!

வடமாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் ஆண்டுகளில் சுமார் 103 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், யாழ்.மாவட்டத்தில் 49 பாடசாலைகளும்,...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை பாடசாலை நடவடிக்கைகள் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.இந்துக் கல்லுாரி மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயற்சி!

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன்...

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்!!

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்...

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான...

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேரும் மாணவர்களுக்கு உறுதிமொழிச் சான்றிதழ்!

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின்...

பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்!!

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை...

இனி பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளில் இருந்தபடியே ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிபாளருடன் பேசலாம்!

வடமாகாண பாடசாலைகளில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது பாடசாலைகளில் இருந்தவாறே வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளருடன் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடியும்....

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர...

நடைமுறைக்கு வரும் புதிய திட்டங்கள்!கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 - 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பாடத்தை எட்டாம்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டு புள்ளிகள் வெளியாகின!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ரீதியாகவும் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த...

உயர்தர பரீட்சை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (23) உயர்தரபரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் உட்பட பொதுமக்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம்...

இம்மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் !

ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் நிறைவடையும் என்றும் அதன்பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
Loading posts...

All posts loaded

No more posts