- Thursday
- April 25th, 2024
யாழ்ப்பாணத்தில் கா.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாகவே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு...
எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான பாடசாலை மாணவர்களுக்கான தவணை விடுமுறைகளை வழங்காதிருக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, குறித்த காலப்பகுதியில் விடுமுறையின்றி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பரீட்சைகள் நடைபெறும் நாட்களில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக மன்று உத்தரவிட்டது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நாட்டின் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் பாடசாலை தவணை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...
பாரதூரமான யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப்புலிகளால் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படவில்லை. யாழில் கூட இறுதிகட்ட யுத்தத்தின் போதும் அமைதியான முறையில் பரீட்சைகள் இடம்பெற்றன. எனவே நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இடையூறின்றி பரீட்சைகளை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது. இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவடையவுள்ளன. இரண்டாம் தவணை ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி...
நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23 (திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் தயார் படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார். ஆணையாளர் இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்...
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என...
சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நாளை சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கு...
இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர்...
ஏப்ரல் 18, 2022 முதல் பாடசாலை நேரம் ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் முதலாம் பாடசாலை தவணை தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை நேரங்களை நிறைவு செய்வதற்கு இந்த...
இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலேயே நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடமொன்றை இவ்வருடம் திறக்க அரசு தீர்மானித்துள்ளது என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன...
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்துப் பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது...
2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்ஸன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு 9.55 மணிக்கு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதனடிப்படையில் 10.20 மணிவரை உத்தியோகபூர்வமாக வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயப்...
2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 07ஆம் திகதி முதல் மார்ச் 07ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்மாதம் 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பாடசாலை விவகார மேலதிகச் செயலாளர் இ.டபிள்யு.எல்.கே.எகொடவெல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அந்த காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts