- Tuesday
- May 5th, 2026
யாழ்.மாவட்டத்தில் இப்போதும் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயத்திற்குள்ளேயே இருக்கின்றது. நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் நோய் தொற்றுக்குள்ளவர்கள் எமது மாவட்டத்திற்குள் நுழைய வாய்ப்புக்கள் உள்ளது. மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது. மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர். எனினும் சுமார் 30 நிமிடங்களின் பின் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நினைவுச் சுடரை ஏற்றுவதற்காக வந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரனை விமர்சித்து யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் உருவச் சிலைக்கருகில் உருவப் பொம்மை ஒன்று வைக்கப்பட்டது. எனினும், இதை அகற்றிய யாழ்ப்பாணப் பொலிஸார் தமது ஜீப்பில் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சிங்கள...
தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான். எனினும் கடற்படையினர் விரைந்து செயற்பட்டதால் அந்தச் சிறுவனை நீண்ட தூரம் நீந்திச் சென்று பிடித்து வந்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில்...
அனைத்து குடிமக்களினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள தனித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வினவியுள்ளார். புதிய அடையாள அட்டையின் மூலம் தனிப்பட்ட தகவல்களை பௌதீக ரீதியாகவும் இணையத்தின் ஊடாகவும் பார்க்க முடியும். மிகவும் சரியான தரவுகளுடன் கூடிய புதிய அடையாள அட்டைகள்...
நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள பிரதமர், தண்டனை வழங்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ சுமந்திரனுக்கும் பிரதமர்...
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள 23 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) முதல் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்காக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரயாணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் நேற்றிலிருந்து அதிகாலை...
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்கள் மீது இன்று (புதன்கிழமை) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்காக புலனாய்வு துறையினரும் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அந்தவகையில்...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 889ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவ நேற்யைதினம் பிற்பகலுக்கு முன்னர் 21 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மாலையில் மேலும் ஐவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மொத்த தொற்றாளர்கள் 889 பேரில் 366 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்...
விடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து தான் ஒருபோதும் வாக்குகேட்பதில்லை என பல தடவைகள் கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி தொடர்பாக கூட்டமைப்பிற்குள் உள்ளவர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்ற நிலையில் இது குறித்து சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பாக வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை நேற்று பொலிஸ் சைபர் குற்றவியல்...
சுமந்திரனின் பேச்சினால் சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் தொடர்பாகவும் எமது அரசியல் செயற்பாடு தொடர்பாகவும் தவறான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறான கருத்தை உடையவர் அவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் தேசிய பட்டியல்...
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாதகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். சட்டத்தரணி சந்திரசேகரனின் ஏற்பாட்டில் முன்னாள் போராளி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். “எனது கட்சிக்காரரை இராணுவத்தினம் தேடிவந்தனர். எனினும் சிப்பாயைத்...
இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்கள் குறித்த அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க சமூக தாக்கமொன்றை உருவாக்காத வகையில் சுகாதார அதிகாரிகள் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார...
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என்றும் அதற்கமைய நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும்...
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில், கமி என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கரவண்டிகள் ஆகியன சேதமாக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புங்கன்குளம் வீதி வழியாக யாழில் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணியளவில் 10 மோட்டார் சைக்கிளில் சென்ற கமி...
தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியும் அவர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் பற்றி சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சுமந்திரனின் கருத்து தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக்...
மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட்-19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முழு நாட்டிலும் பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வந்தபோதும் அதனுடன் பஞ்சம் ஏற்பட இடமளிக்கக்கூடாது. திட்டங்களை முன்னெடுக்கும் போது முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு அத்தகைய தவறுகள் மீண்டும்...
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த சில...
Loading posts...
All posts loaded
No more posts
