- Wednesday
- April 30th, 2025

தனது மகன் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து மீட்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் கலாசார உத்தியோகத்தரான பிரபாகரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.யாழ். பிரபல பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்கும் 14 வயதான இம்மாணவன், நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து...

இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்கு முறைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சார்ந்ததும் தீர்க்கமானதுமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது.தெற்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளீர்ப்பதற்கான...

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வடக்கில் மீண்டும் ஒரு கிளர்ச்சி ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்குள்ள படைமுகாம்கள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)

யாழ்.குடாநாட்டின் பொருளாதார வளங்களை அள்ளிக்கொண்டுச் செல்வதற்காக புதிது புதிதாக யாழில் முளைக்கும் நிதி நிறுவனங்களினால் யாழ்.குடாநாட்டு வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று யாழ். வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.யாழ்.வணிகள் கழகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். (more…)

இலங்கையின் ஏனைய பாகங்களிலுள்ள நிலைமையை ஒத்ததாக வடக்கு கிழக்கிலும் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் என தான் நம்புவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ஏப்ரல் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான வருடாந்த அறிக்கையின் வீடியோவில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க...

இலங்கையின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் பதிலளிக்க வேண்டியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று 24.05.2012 அன்று அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று காணாமல் போனோர், தடுப்பிலுள்ளவர்கள் மற்றும் சிறைகளில் வாடுகின்றவர்களின் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். (more…)

தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து...

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நாளை வவுனியாவில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம் பெறவுள்ளது. சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் அழுத்தங்கள்...

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வியாபாரி ஒருவர் திருநெல்வேலியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார் .

யாழ் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையுடன் இணைந்து போக்குவரத்துச் சேவையை நடாத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வடமராட்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

யாழ் நெல்லியடி சந்தைப்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தீவிபத்தொன்றின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை கொடிகாமப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் இவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளைச் வேகமாக செலுத்திச் சென்றுள்ளனர். (more…)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த தாக்கப்பட்ட சம்பவத்ததை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரும் அனைத்துப்பீடாதிபதிகளும் வன்மையாக கண்டித்துள்ளனர்.இத்தாக்குதலால் மாணவர்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக சுமூகமான செயற்பாட்டிற்கு உதவப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 'சுகவாழ்வை நோக்கி' என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்றுமருத்துவக் கண்காட்சி 21.05.2012 பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக...

யாழ். பாஷையூர் பற்றிமாதா தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணியிலிருந்து பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது (more…)

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்ற தனது நீண்டகால கோரிக்கையை தளர்த்தி, இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தர்ஷாந்தன் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரிப்பதற்கு யாழ்.பிரதம பொலிஸ் பரிசோதகர் குணசேகரா தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) கே.ஈ.எல். பெரேரா தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற வாரராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு...

All posts loaded
No more posts