எழுதுமட்டுவாள் வாகன விபத்தில் வட்டுக்கோட்டை இளைஞர் பலி

லொறி மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் ஏ9 வீதிக்கும் எழுதுமட்டு வாழ் சந்திக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுமட்டுவாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுத்துரை பாலசுப் பிரமணியம் (வயது 27) இந்த விபத்தில் (more…)

யாழ். பல்கலை. மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்யும் சீ.ஐ.டியினர்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதானதையடுத்து விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கும் நிலையில் அவர்களின் வீடுகளுக்கு படைப் புலனாய்வுப்பிரிவினர் சென்று அவர்களை விசாரணை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

இலங்கைக்கான புதிய நோர்வே தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!- பல கேள்விகளுக்கு அரச அதிபர் மௌனம்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் தலைமையிலான குழுவினர் நேற்றய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட கிரிட் லேச்சேன், (more…)

நாளையும் நாளை மறுதினமும் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்துவதால் நாளை வியாழக்கிழமையும், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையும் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும். (more…)

கெற்பேலியில் முன்னைய இடத்தை; ராணுவம் கையளிக்க மறுத்ததால் கோயில் காணியில் மயானம்

35 வருடகாலமாக மக்களால் பாவிக்கப்பட்டு வந்த கெற்பேலி மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமையால் அதற்கு அருகிலுள்ள கோயில் காணியில் புதிய மயானத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா தெரிவித்தார். (more…)

பிரதம நீதியரசருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் யாழில் போராட்டம்

பழுதடைந்த நிலையில் சேவையாற்றும் தனியார் பஸ்களின் வழி அனுமதி ரத்து; ஜனவரி முதல் நடைமுறைக்கு

தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் வாகனங்களைத் திருத்தி நல்ல முறையில் வைத்திருக்க வேண்டும்.பயணிகளின் பயணத்துக்கு தகுந்த முறையில் இல்லாது பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் வாகன வழி அனுமதிப் பத்திரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது. (more…)

ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் III இற்கு விண்ணப்பம் கோரல்

கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் III ஆம் வகுப்புக்குச் சேர்ப்பதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. (more…)

பாதுகாப்பற்ற மரப்பாலம் அச்சத்துடன் செல்லும் மக்கள்

மரங்கள் மற்றும் தடிகள் அடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பாலத்தினூடாக நெடுங்கேணியிலிருந்து சேனைப்புலவு செல்லும் மக்கள் தினமும் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தால் பெருவீழ்ச்சி!; சட்டவிரோத மீன்பிடியே காரணமாம்

குடாக்கடலில் கடலுணவுகளின் பெருக்கம் 40 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது என்று யாழ்.மாவட்டக் கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். (more…)

வடபகுதி இளைஞர்களை தூண்டும் அரசியல்வாதிகளை விசாரிக்க புலனாய்வு பிரிவினருக்கு கோத்தா பணிப்பு

தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப வடக்கில் உள்ள இளைஞர்களை தூண்டும் சில தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் திட்டமிட்ட குழுவினர் தொடர்பாக விசாரணை நடத்துமாறு புலனாய்வு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். (more…)

இந்திய பிரதித் தூதுவர் கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதித் தூதுவர் ஸ்ரீ.பி.குமரன் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உதவி செயலாளர் பி.எஸ்.ராகவன் உட்பட பலர் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தினை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர். (more…)

வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி உண்பது உடலுக்கு கேடு ; யாழ் மாவட்ட சுகாதார சேவைப் பிரிவினர்

மேற்குல நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியமையை அடுத்து பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பறவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வந்துள்ளன.குறித்த பறவைகள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் உள்ள நீர்நிலைகளில் தஞ்சமடைந்துள்ளன. (more…)

21 ஆம் திகதி உண்ணாவிரதம்!! தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனைவருக்கும் அழைப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். (more…)

குப்பிளானில் நள்ளிரவில் கொள்ளை

குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் ஏழு லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் நீக் இறைக்கும் இயந்திரம், கையடக்கத் தொலைபேசிகள் என்பனவும் களவாடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடக்கில் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு கண்டனம் தெரிவித்து வட பகுதி சட்டத்தரணிகள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பினால் வட பகுதி நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. (more…)

வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறை அடுத்த ஆண்டு முதல் அமுல்!

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக சாரதிகளுக்கு புள்ளி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யும் முறை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

நெடுந்தீவில் கட்டுமானப் பணிகளுக்கு வெளியிடங்களில் இருந்து பொருள்கள்; துறைமுகத்தில் ஏற்றி இறக்குவதில் நெருக்கடி

நெடுந்தீவுப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்கான கல், மண், சிமெந்து உட்பட அனைத்துப் பொருள்களும் வெளி இடங்களில் இருந்து படகுகள் மூலமே கொண்டு வரப்படுகின்றன என்று கூறப்பட்டது. (more…)

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)

இராணுவத்தில் வடக்கு இளைஞர்களும் விரைவில் இணைக்கப்படுவர்; ருவான் வனிகசூரிய தெரிவிப்பு

வட பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் விரைவில் படையில் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.தமிழ்ப் பெண்கள் பலவந்தமான முறையில் இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை (more…)
Loading posts...

All posts loaded

No more posts