நாளாந்தம் 6 மணித்தியால மின் தடை அமுலாகும் சாத்தியம்!!

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை தொடர்பில் நேற்று...

ரஷ்யர்களின் செயலால் உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ரஷ்யாவின் சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின இந்த தாக்குதலால் சபோரிஜியாவிலுள்ள வீடுகள் சேதமாகியுள்ளடதுடன் மின்சாரத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த டெலிகிராம் ஏவுகணைகள் சபோரிஜியாவிலுள்ள கட்டிடங்களில் விழுந்து நொறுங்கியதாக ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன்...
Ad Widget

பலாலி விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர்...

யாழில் கிணற்று நீரை குடிக்க பயன்படுத்தலாமா என பல்கலைக்கழக துறைசார்ந்தோர் ஆய்வு செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

யாழ் குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் ஆய்வுரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் ஊடகங்கள் ஊடாக கேரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் குடாநாடு மட்டுமன்றி வடபகுதி எங்கும் போத்தல்...

கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. டிசம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும்...

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை யாழ். நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது. இதன்படி வருகின்ற புதன்கிழமை வீடுகளில் திருக்கார்த்திகை திருநாள் இடம்பெற்ற...

இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !

திட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்விநியோகம் தடைப்படவுள்ளது. இந்த மின்வெட்டு முறைமைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு விஜயம் செய்துள்ள இவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டனர். இதேவேளை கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விஐயம்...

மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி நிறைவடைந்தது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதற்கட்டம் நடைபெறவுள்ளதோடு, நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பாடசாலை கட்டணம்!

அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(04.12.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமை காரணமாகவே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால்...

ரஷ்ய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை – அதிரடி காட்டும் உக்ரைன் அரசு

உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதுடன், உக்ரைன் அரசு தொடர்ந்து...

இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல்!!

இந்திய ரூபாயை வெளிநாட்டு கரன்சியாக அறிவிக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது என்ற போதிலும் இலங்கை மக்கள் 10 ஆயிரம் டொலர் (ரூ.8 லட்சத்து 10 ஆயிரம்) மதிப்புள்ள இந்திய ரூபாயை வைத்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு...

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக முன்னெக்கப்பட்டது. சர்வதேசத்திடம் நீதி வழங்குமாறு கோரி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் விடுதலை!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வழக்குதான யாழ்.பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் ந.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்க நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

யாழில் 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்து 11 மாதங்களேயான குழந்தை சளி காரணமாக உயிரிழந்துள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை முட்டு இழுத்ததன் காரணமாக பெற்றோரால் காரைநகர் வலந்தலை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட போதிலும் சிகிச்சை...

கடும் பொருளாதார நெருக்கடி! அவசரமாக அமெரிக்க பயணமாகும் பிரான்ஸ் ஜனாதிபதி

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இம்மானுவல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனி...

வீதிகளை புனரமைக்க கோரி சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டம்!!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் செவ்வாய்க்கிழமை (நவ. 29) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை எனவும் மழை காலங்களில் வீதியால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமை காணப்படுத்தாகவும் அதனால் வீதியை புனரமைத்து தருமாறு நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையிலையே இன்று இப்போராட்டம்...

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு!!

ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் என யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , வைத்திய பரிசோதனையில் சிறுவனுக்கு கிருமி தொற்று ஏற்பட்டு இருந்தமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுவன் ஊசி மூலம்...

எல்லை தாண்டி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த 23 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதானவர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts