Ad Widget

முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள் ! -முதலமைச்சர்

யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (27) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முழுமையான உரை வருமாறு அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய பழைய மாணவர்களே, பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளே, கல்விமான்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் இன்று இரத்ததானம் ! 206 பேர் பங்கேற்பு!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில்  கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது....
Ad Widget

செம்டெம்பர் 26ம் திகதி மாபெரும் இரத்த தான முகாம்! – யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு செம்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றினை  யாழ் இந்துக்கல்லுாரி யின் யாழ்ப்பாணம்  பழையமாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது . காலை 9 மணிதொடக்கம் 3 மணிவரை இடம்பெறவுள்ள இந்த இரத்ததானத்தில் பங்குகொண்டு கல்லுாரிக்கும்  கல்லுாரிக்கு பெருமைசேர்த்தவர்களுக்கும் பெருமை சேர்க்குமாறு பழையமாணவர்சங்கம்...

பழையமாணவர் போராட்டம் வலுத்தது! ரங்காவின் வாழ்த்துச்செய்தியுள்ள பக்கங்கள் சிறப்பு மலரில் கிழித்தெறியப்பட்டது! யாழ் இந்துக்கல்லுாரியில் சம்பவம்!

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்காக சர்ச்சைக்குரிய ரங்கா அவர்கள் விழா இணைப்பாளராக நியமிக்கப்பட்டு ரங்காவை முன்னிலைப்படுத்துவதால்   பழையமாணவர்சங்கம் விழாவினை புறக்கணிக்கும் முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வேளை இன்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வெளியிடப்பட இருந்த சிறப்பு மலரில் இணைப்பாளரின் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய பக்கங்கள் பழையமாணவர்களால் கிழித்தெறியப்பட்டு கல்லுாரி வீதி ஓரம் குப்பையில்  வீசப்பட்டுள்ளது.முன்னதாக...

கல்வியமைச்சர் தனியார் உலங்கு வானூர்தியில் தரையிறக்கப்பட்டார்! நிகழ்வில் சரா எம்பியின் சிறப்புரிமை மீறப்பட்டது!

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை பழைய மாணவர்சங்கம்  புறக்கணித்துள்ள நிலையில் இன்றைய(24) முதல் நாள் நிகழ்வுக்கு மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்ச பிரதம விருந்தினராக வந்து கலந்து கொண்டார்.யாழ் இந்துக்கல்லுரிக்கு கல்வியமைச்சர் உலங்கு வானூர்தியில் வந்திறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. [caption id="attachment_50594" align="aligncenter" width="587"] Daya Aviation என்ற தனியார் நிறுவனத்தின் கெலியில் 300,000...

ரங்காவுக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்காவுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவுவிழா நடைபெறவுள்ள நிலையில், அந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள வரும் ஸ்ரீரங்காவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 'ரங்காவின் பிரசன்னத்தை எதிர்க்கும் யாழ். இந்து சமூகத்தை ஆதரிப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தின் கீழ்ப் பகுதியில்...

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சவுடன் ரங்கா யாழ் இந்துக்கல்லூரியில் முத்திரை வெளியீட்டில் பங்கேற்கிறார் ?- பழையமாணவர்கள் எதிர்ப்பு!

யாழ் இந்துக்கல்லூரி 125 ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டங்களை புறக்கணிக்க எடுத்த முடிவை மீளப்பெறுவதில்லை என பழையமாணவர்சங்கம் நேற்றைய (20) கூட்டத்தில் மீள உறுதி செய்துள்ளது. இதுபற்றி பழையமாணவர் சங்கத்தலைவர் சி.சுந்தரேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஈழத் தமிழர் வரலாற்றில் பல புகழ் பூத்த பழைய மாணவர்களைத் தந்த கல்லூரியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு...

யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது

யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழைய மாணவர் சங்கம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.  இது தொடர்பில் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இணைப்பு   தொடர்பான செய்தி யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும்...

யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும் ரங்காவின் பிரசன்னமும்!

யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் உள்ள பழையமாணவர் சங்கங்களாலும் கல்லூரி சமூகத்தினாலும் இதனை முன்னிட்டு செயற்பாடுகள் சிறு சிறு விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மகுடமாக நிறைவு விழா ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது இங்கு தான்...

யாழ். இந்துக்கல்லூரியில் ‘சபாலிங்கம் அரங்கம்’ திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த...

யாழ் இந்துவில் கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டிகள்

Matrix Homes அனுசரணையுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் கல்லூரின் 125ம் ஆண்டை முன்னிட்டு நாடாத்தப்படுகின்ற கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று (21-03-2015) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் வெகு விமர்சையாக யாழ் இந்துக் கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பெண்களுக்கான இராமநான் கல்லூரினை எதிர்த்து திருக்கன்னியர் மட கல்லூரி அணி மோதவுள்ளது....

நாவலர் விழா!

யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...

யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார். மேற்படி நிகழ்வுகள் அந்தந்தப் பாடசாலைகளில் இன்றைய தினம் (13) இடம்பெற்றன. முன்பதாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள்...

யாழ் இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும் நடந்தேறியது

இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. முதல் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் இடம்பெற்று 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந்...

யாழ். இந்து பழைய மாணவர் 2005 அணியின் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி '2005 பழைய மாணவர்கள்' அணியினால் கல்விக்கான ஊக்குவிப்பு நடவடிக்கை கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. (more…)

யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது

மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது. (more…)

யாழ் இந்து – கொழும்பு ஆனந்தா கல்லூரிகளின் துடுப்பாட்டப் போட்டியில் ஆளுநர்

யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான வீ.ரி.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கடந்த சனிக்கிழமை பார்வையிட்டார். (more…)

இந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி

கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றி பெற்றது. (more…)

இன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணிக்கும், கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி இன்று 12.3.2013 யாழ்.இந்து கல்லுாரி மைதானத்தில் ஆரம்பமாகியது. மேலதிக விபரங்களை யாழ் இந்துக்கல்லூரி இணையத்தளமான www.jhc.lk ல் காணலாம்.

வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் யாழ். இந்துக்கல்லூரி முன்னிலையில்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts