பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு அனுமதி

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பொதுமக்களுடன் திங்கட்கிழமை (26) சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு சென்ற விஜயகலா, தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டார். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன்...

உயர்பாதுகாப்பு வலய மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை – மாவை

உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா திங்கட்கிழமை (26) தெரிவித்தார். மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்கின்றதா? என்று அவரிடம் வினாவியபோதே, அவரிடம் இவ்வாறு தெரிவித்தார்....
Ad Widget

மீண்டும் இராணுவக் குடியிருப்பு?

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...

மீள்குடியேற்றம் துரித கதியில் இடம்பெறும் – சுவாமிநாதன்

யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...

காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்

பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி, காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆனைக்கோட்டை கூழாவியடியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு முன்னால் இந்த போராட்டம் இடம்பெற்றது. தனியாருக்கு சொந்தமான காணியில் இலங்கை இராணுவத்தின் 11ஆவது சிங்க ரெஜிமென் படைமுகாம் அமைந்துள்ளது. இந்தக் காணியினை இராணுவத்துக்கு...

நிபந்தனை அடிப்படையிலேயே கேப்பாப்பிலவு காணிகள் மக்களிடம் கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)

மீண்டும் பறிபோகத் தயாராகும் தமிழர் நிலங்கள்

இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

நலன்புரி நிலையங்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், (more…)

நாங்கள் சொந்த நிலத்திற்கே போக ஆசைப்படுகின்றோம்; மகஜர் கையளிப்பு

தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரி வலி.வடக்கு மக்கள் மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி. கருணாகரனிடம் கையளித்துள்ளனர். (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று கூட்டுப்பிரார்த்தனை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்ற விவகாரம்; பிரிட்டனுக்கு மகஜர்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)

அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?

இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. (more…)

யாழ். இராணுவ பாதுகாப்பு வலயத்தில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். (more…)

அச்சுவேலியில் பதற்றம்

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. (more…)

காணி துப்புரவு பணி பொலிஸாரினால் தடுத்து நிறுத்தம், பொலிஸாருக்கு எதிராக வழக்கு பதிவு

வலி.வடக்கு பிரதேச சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் கீரிமலையில் உயர்பாதுகாப்பு வலயத்துக்கு வெளியில் உள்ள காணிகளை காணி உரிமையாளர்கள் துப்புரவு பணியை மேற்கொள்ளச் சென்றபோது (more…)

யாழ்.குடாநாடு முழுதும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படும் – கஜதீபன்

வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் யாழ்.குடாநாடு முழுவதையும் இராணுவத்தினர் தமது தேவைகளுக்கு என சுவீகரித்து விடுவார்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

“காணிகளை துப்புரவு செய்து நாமாகவே குடியேறுவோம்”, கீரிமலை மக்கள் படையினரிடம் தெரிவிப்பு

கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். (more…)

நகுலேஸ்வரத்தில் கடற்படை முகாம் நிர்மாணிக்க 183 ஏக்கர் காணி அளவீடு – கஜதீபன்

கீரிமலை, நகுலேஸ்வரம், ஜே - 226 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியைச் சேர்ந்த 183 ஏக்கர் காணி, பொலிஸாரின் துணையுடன் நிலஅளவையாளர் திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (14) அளவீடு செய்யப்பட்டுள்ளது (more…)

வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம்

வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும் நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. (more…)

30 ஆண்டுகளுக்குப்பின் மயிலிட்டி கண்ணகியை தரிசிக்கும் மக்கள்!

வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மயிலிட்டி கண்ணகி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வதற்கு இன்று மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts