யாழ்.மாநகரில் இலத்திரனியல் கடைகள் உள்பட மூன்று இடங்களில் திருட்டு!!

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு இடங்களில் பெறுமதியான இலத்திரனியல் பொருள்களைத் திருடியமை மற்றும் திருடப்பட்ட பொருள்களை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் எட்டுப்பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து திருட்டுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை மற்றும் கஸ்தூரியார் வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களே நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால்...

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்தக் கல்லூரியின் மாணவர் விடுதிகள் இராணுவத்தினரால் கோரப்பட்டதையடுத்து வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்ட நிலையில் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் வீடு திரும்பினர். இந்த நிலையில் அங்கு முப்படையினரைத் தனிமைப்படுத்துவதற்கான...
Ad Widget

யாழில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது!

யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் அத்தியடி பிள்ளயார் ஆலயத்தில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அது தொடர்பக்க அறிந்து கொண்ட பொலிசார் ஆலயத்திற்கு விரைந்து பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 17 பேரை கைது செய்து யாழ்ப்பாண...

மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை – அஜித் ரோஹன

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து மக்கள் வெளியில் நடமாடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பில் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஊரடங்கு தளர்த்தப்பம் பிரதேசங்கள், மற்றும் ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படல் வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் பயணங்களை மேற்கொள்ளுதலோ, அத்தியாவசியத் தேவையின்றி...

யாழிற்கு வருவோருக்கான பி.சி.ஆர். பரிசோதனை யாழ்.மாவட்டச் செயலகத்தில் முன்னெடுப்பு!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தோருக்கான கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறித்த பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள்...

யாழில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணதத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.நாவலர் வீதியில் உள்ள வீடொன்று, அதன் உரிமையாளரால் பிறிதொரு நபருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. வாடகைக்குப் பெற்றவர் அதனை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடமாக வாடகைக்கு வழங்கி வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் குறித்த...

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு!

கோவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான 367,000 விண்ணப்பங்கள் இணையம் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார். க.பொ.த. உயர்ந்தார்...

நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை கொட்ட முயற்சித்த நிறுவனம்!!

மல்லாகம் நீதிமன்றின் உத்தரவை மீறி மலக்கழிவுகளை ஏற்றி வந்து கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு முயற்சித்த தனியார் நிறுவனம் ஒன்றின் வாகனம் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம்-பொன்னாலை வீதி கல்லுண்டாய் வெளியில் இடம்பெற்றது. நவாலி மக்களின் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு கல்லுண்டாயில் மலக்கழிவுகளைக் கொட்டுவதற்கு...

சடலங்களை அப்புறப்படுத்தும் 1000 உறைகளை கோரியுள்ள சுகாதார அமைச்சு

நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இறப்புக்கள் பதிவானால் சடலங்களை அப்புறப்படுத்துவதற்கான 1000 உறைகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுகாதார அமைச்சு கோரியிருக்கிறது. கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர்...

கே.கே.எஸ் பொலிஸ் உத்தியோகத்தர் தனிமைப்படுத்தலில்!!

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இந்த...

யாழ். இந்து மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் ஆரம்பம்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு கல்லூரியின் http://www.jhc.lk/ என்ற இணைத்தளத்தில்...

நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு!! பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகின்றனவா?

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு...

சற்றுமுன் வெளியான செய்தி: நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு!!

நாளை (27) திங்கட்கிழமை முப்படையினர் முகாம்களுக்கு திரும்புதற்கு வசதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கு நாளைய தினம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவிருந்த நிலையில்குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையைில், இந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 5.00...

எலிக் காய்ச்சலினால் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!!

எலிக் காய்ச்சலினால் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் இறுதி கிரிகை, கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர் போன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக இலங்கை கடற்படையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு கடற்படை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுவந்த கடற்படை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். எலிக் காய்ச்சல் நோய் நிலைமையின் காரணமாக கொழும்பு...

ஏழாலையில் முதியவரின் சடலம் எரிகாயங்களுடன் நிலையில் மீட்பு!!

ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி...

ஆனைப்பந்தியில் வீதியில் பயணித்த முதியவர் சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!!

யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-68) என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990...

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை நாடுமுழுவதும் நாளை முதல் நடைமுறைக்கு – பொலிஸ்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார். எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த...

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா...

யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக...
Loading posts...

All posts loaded

No more posts