வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பு

பனை அபிவிருத்திச் சபையினை பல்வேறு வகையில் தரம் உயர்த்துவதற்குரிய வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பீ.ஏ.கிருசாந்த பத்திராஜா தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு பனை அபிவிருத்தி சபை ஊடாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலத்தில் நேற்று வியாழக்கிழமை...

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் அறிவிப்பு!

வணக்கத் தலங்களில் பின்பற்றப்படவேண்டிய கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இன்று வெள்ளிக்கிழமை முதல் வணக்கத் தலங்களில் சமய வழிபாடுகளை கடைப்பிடிக்க முடியும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வணக்கத் தலங்களில் ஆகக்கூடுதலாக 50 பேர் மட்டுமே சமய நிகழ்வுகளில்...
Ad Widget

தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பு வெளியீடு

பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பரிசோதனை முடிவு வெளியானது!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது உறுதியானது. இந்திய புடவை வியாபாரியுடன் தொடர்புடைய 5 வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லையென்பது உறுதியானது. இதேவேளை, புடவை வியாபாரி உள்ளிட்ட குழுவினரை பேருந்தில்...

இலங்கையில் மிருககாட்சி சாலைகள் மற்றும் பூங்காக்கள் திறப்பு

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் மற்றும் தேசிய சரணாலயங்கள் என்பன திறக்கப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இவை மீளவும் திறக்கப்படவுள்ளன என சுற்றாடல் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த...

மத நடவடிக்கை, பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதற்கும் அனுமதி!!

வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிக்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆலயங்கள் உள்பட மத வணக்க ஸ்தலங்களில் வழிபாடுகளை நடத்த நாளை வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோவிட் -19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 பேருடன் வழிபாடுகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அரச...

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல்!! வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது

2020 பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ள நிலையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தடைகளையும் மீறி சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

சுதந்திரபுரம் படுகொலை 22ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரின் தடைகளையும் மீறி அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு விமானப்படை மற்றும் ஒருங்கிணைந்த எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நடத்த அனுமதி

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அன்னதானம் வழங்குதல், சப்பற உற்சவங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இன்று (புதன்கிழமை)...

யாழ்.நாக விகாரையின் முகப்பு புத்தர் சிலை மீது கல் வீச்சு!! கண்ணாடி கூடு சேதம்!!

யாழ்ப்பாணம் நாக விகாரை பிராதன வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிளில் வந்த இருவரே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலாளிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள...

பரீட்சைகள் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்ரெம்பர் 7ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 2ஆம் திகதிவரையும் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்ரெம்பர் 13ஆம் திகதியும் நடைபெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 8ஆம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பன அதற்குப் பின்னரே...

யாழில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ். மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் நேற்றையதினம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொடர்பான...

பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6,...

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் – மாவை

விடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில் வவுனியாவில்நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுகின்றது!!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஓகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக...

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழிலிருந்து இந்தியா சென்ற புடவை வியாபாரிக்கு கொரொனா!! யாழில் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் திரும்பிய நிலையில், கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தமிழக புடவை வியாபாரி, யாழில் பல இடங்களிற்கும் வர்த்தகத்திற்கு சென்று வந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேஸ் பாபு என்பவர் கடந்த பெப்ரவரி மாதம் மேலும் சிலருடன் யாழ்ப்பாணம் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டார். இலங்கையில் சிக்கியிருந்த...

வடமாகாணத்தில் இடம் பெறும் விதிகளுக்கு முரணான இடமாற்றங்கள் மக்களுக்கான சுகாதார சேவை வழங்கலை மிகவும் பலவீனப்டுத்தியுள்ளது!!

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மலினப்படுத்துவதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் வருமாறு, மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை...

அச்சுவேலியில் செல்லப்பிராணி நாயைக் கடத்தி கப்பம் பெற்ற கும்பல்!!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்தச் சம்பவம் தொடர்பில்...

இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு!!

நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ரயில் பாதைகளை சீரமைத்து சுத்தப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ்ப்பாணத்தின் ரயில்ப் பாதைகளும் தனியார் ஒப்பந்த தாரர்களால் சீரமைக்கப்பட்டுவருகின்றன. இவ்வாறான...
Loading posts...

All posts loaded

No more posts