Ad Widget

பாடசாலை நேரத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை 4 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

அந்தவகையில் தரம் 3 மற்றும் 4 ஆம் தரங்களுக்கு காலை 07:30 முதல் முற்பகல் 11:30 மணி வரையும் 5 ஆம் தரத்துக்கு காலை 07:30 முதல் நண்பகல் 12 மணிவரையும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்களுக்கு காலை 07:30 மணி தொடக்கம் பிற்பகல் 01:30 மணிவரையும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும்.

அத்தோடு 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு காலை 7:30 முதல் மாலை 3:30 மணி வரையும் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலைகளை ஜூன் 29ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

முதல் கட்டம் ஜூன் 29ஆம் திகதி முதல் ஜூலை 3 வரை – அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கவேண்டும்.

2ஆவது கட்டம் ஜூலை 6 முதல் ஜூலை 17 வரை (5, 11 மற்றும் 13 தரங்கள்)

3ஆவது கட்டம் ஜூலை 20 (10 மற்றும் 12 தரங்கள்)

4ஆவது கட்டம் ஜூலை 27 (3, 4, 6,7, 8 மற்றும் 9 தரங்கள்)

தரம் 1 மற்றும் 2 எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts