வளிமண்டலத்தில் தளம்பல்; எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிப்பு

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வட...

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால்...
Ad Widget

வைத்தியர் அர்ச்சுனாவுக்குப் பிணை!!!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்க சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்டது. நேற்றையதினம் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது...

அரிசியில் செயற்கை சாயம் கலப்பு – யாழில் மில் உரிமையாளருக்கு தண்டம்!

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்டிருந்தார். மீட்கப்பட்ட...

பார் பெர்மிட் பெற்ற அரசியல்வாதிகளை பகிரங்கப்படுத்தவும்!!

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்...

யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் சிரமதான நடவடிக்கைகள்!!

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன்,...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நேற்று 4ஆம் திகதி...

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கைப்பேசி கேமிற்கு...

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும்,...

பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும்...

அபயம் பிரிவின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன!

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளன. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் (IOM) அலுவலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

யாழில் வாள்கள், கைக்குண்டுகளுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல்...

குத்துவிளக்கு சின்னத்திற்கு பதிலாக சங்கு சின்னம்!!

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின்...

பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

தமிழரசுக் கட்சியுடன் பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A, சுமந்திரன் தொிவித்துள்ளாா். மன்னாரில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்...

கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு மீண்டும் பேருந்து சேவை!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த பேருந்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில்...

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு!

உணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களில் எந்தவிதாமாற்றமும்ம மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது....

புலமைப்பரிசில் பரீட்சை சிக்கல் – இறுதி தீர்மானம் வௌியானது!!

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி...

தமிழரசுக் கட்சியின் ஆதிக்கத்தின் கீழ் சேர முடியாது!

தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில்...
Loading posts...

All posts loaded

No more posts