சிறுவர்களிடையே அதிகரிக்கும் தொற்றா நோய்கள்!

நாட்டில் சிறுவர்களிடையே தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உணவு நுகர்வில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்கள் சிறுவர்களிடையே பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், தற்போது நாட்டில் ஐந்து பெண்களில் ஒருவர் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக சுகாதார நிபுணர் திருமதி தினுஷா பெரேரா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

Related Posts