நவாலியில் ஏராளமான வெடிபொருட்கள் கண்டறியப்பட்டது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறிப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்ட பின்னர்...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நா வினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு தீ வைப்பு!!

செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான நேற்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற...
Ad Widget

நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை!

எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 95 ஆக்டேன் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை ரூ. 335. 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. லங்கா ஆட்டோ டீசலின் விலையும் ரூ. 06 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் பதவி நீக்கம்!!

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபராஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிச்சேவை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை சமீப காலமாக நடைபெற்று வந்திருந்தது. இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் குறித்த நீதிவான் ஒருவர் நீதிவான் ஒருவருக்குரிய கண்ணியமான நடத்தையை வெளிப்படுத்தியிருக்காத குற்றச்சாட்டுக்கு ஏதுவான...

பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணறொன்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ” நேற்றிரவு மாலை சுமார் 6.30 மணி அளவில் குறித்த பகுதியில் சட்ட விரோத கசிப்பு...

சர்வதேச நீதி கோரி யாழில் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை...

சிறுமியின் கை அகற்றிய விவகாரம் : தாதிய உத்தியோகத்தருக்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட்...

தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் தான் எதிர்ப்பு!!

வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோர்கடிக்க தமிழ் மக்கள் முன் வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ். கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பை தோர்கடிக்க தமிழ்...

பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கட்டுநாயக்கவில் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன....

முல்லைத்தீவு வைத்தியசாலையில் நான்குமாடி நோயாளர் விடுதி விரைவில் அமைக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் தற்போது முறையான ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகள் இன்மையினால் கட்டில்கள் நிரம்பி வழியோரங்களில் பாய் விரித்து படுத்திருந்து நோயாளர்கள் மருத்துவம் பெறும் அவல நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த நோயாளர் விடுதிகளை அமைப்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட...

சிவசேனை முன்னெடுத்த போராட்டம் – கிளிநொச்சியில் இருந்து வந்து குழப்பிய கும்பல்

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் நேற்றையதினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி சென். தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வடமாகாண...

கள்ள மண் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி குடும்ப பெண் உயிரிழப்பு!!

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பி சென்றுள்ள நிலையில் கொடிகாம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் மிருசுவிலை...

மந்திரி மனையை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று (22) குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த...

யாழ்ப்பாணத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று ஆரம்பம்!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற்றதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் நாடு முழுவதும் நடத்தப்படும் என...

திலீபனின் நினைவுப்படம் பொலிஸாரால் அகற்றப்பட்டது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (19) காலை பொலிஸாரால் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவுத் திருவுருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்...

வைத்தியர் மீது தாக்குதல் நடாத்திய இருவர் கைது!

உரும்பிராய் பகுதியில் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரை பொலிஸார் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இருவர் வியாழக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், புதன்கிழமை (17) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீதியால் வைத்தியர் ஒருவர்...

மண்டைதீவு மனிதப் புதைகுழி – ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு

யாழ். குடாநாட்டின் 1991 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டை தீவுப் பகுதியில் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் அங்குள்ள தேவாலயக் காணியின் கிணறு உட்பட 3 கிணறுகளில் போட்டு மூடப்பட்டன என்று கூறப்படுவது தொடர்பில் விசாரித்து, அந்தக் கிணறுகளைச் சட்டரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த...

அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகியைப் பயன்படுத்தும் முன்னணி – இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத்...

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவு கடற்பரப்பில் ஆகஸ்ட் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் நாளை வியாழக்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 7 தமிழக...
Loading posts...

All posts loaded

No more posts