இன்று முதல் ஒரு மணி நேர மின்வெட்டு – நேரம் குறித்த அறிவிப்பு!

நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

நேற்று (05) முதல் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகள் உட்பட அனைத்து இலத்திரனியல் அட்டைகளையும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலனி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான அனைத்து பண கொடுப்பனவுகளையும் இலத்திரனியல் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது...
Ad Widget

கடும் மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை வௌியீடு!!

கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐ.நாவில் தமிழர் தரப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ரெலோ – சிறிகாந்தா குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ரெலோ அமைப்பினர் நடத்திய பேச்சு, இராஜதந்திரமற்ற நடவடிக்கை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா விமர்சித்துள்ளார். இம்முறை ஜெனிவாவில் எப்படி தப்பிப்பது என்று அரசாங்கம் சிந்தித்துவரும் இந்த சூழலில் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி பேசுவதற்கு இது உகந்த காலமில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் தரப்புடன் தொடர்ந்தும்...

நாட்டில் சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களின் பொருளாதார நிலைமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதற்கு மற்றுமொரு காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர்...

முதலைகளின் அச்சுறுத்தலால் ஆற்றின் குறுக்கே வேலி!

யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் கலந்து சந்நிதி முருகனை வழிபட்டு வருகின்றனர். ஆலயத்திற்கு வருவோரில் பெரும்பாலானோர் தொண்டைமானாற்றில் நீராடியே...

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் டிசம்பர் மாதம் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் கே.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 04ஆம் திகதி இடம்பெவுள்ளது. அத்துடன், டிசம்பர் 05 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்விப்...

எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. செல்லுபடியற்ற QR ஐ பயன்படுத்தி, எரிபொருள் பெறுவதற்கு முயன்ற நிலையில் முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்துள்ளார். இந்த நிலையில், சந்தேக நபர் ஒருவர் எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

இன்று (05) திங்கட்கிழமை 02 மணித்தியாலங்ளுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்து இல்லை !!

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார...

கோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடர தீர்மானித்தால் அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப்பட்டியல் ஆசனமொன்று வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ச அரசியலில் தொடரும் எண்ணம் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அறம்பேபொல,...

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு

வெளிநாட்டில் இருப்பவர்கள் டொலர்களை செலுத்தி இலங்கையில் எரிவாயுவை முன்பதிவு செய்து தமது நண்பர்களுக்கு விநியோகிக்கும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்குத் தேவையான டொலர்களை கையிருப்பில் வைத்திருக்க முடியுமென நம்புவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதற்காக மிகவும் குறைந்த தொகையான 15...

வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி – வாசுதேவ நாணயக்கார

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை...

வளிமண்டல தளம்பல் நிலை இலங்கையை விட்டு நகர்கிறது!! ஆனாலும் மழை பெய்யகூடும்!!

குறைந்த மட்ட வளிமண்டல தளம்பல் படிப்படியாக இலங்கையை விட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யகூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு...

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!!

இன்று (02) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்த அறிவிப்பு!!

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைகளில் இன்று மாற்றம் இல்லை!!

எரிபொருள் விலைகளில் இன்றைய தினம்(1) திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான விலைமானுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்....

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா காவற்துறை அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார...
Loading posts...

All posts loaded

No more posts