- Wednesday
- May 14th, 2025

யாழ். மாநகரசபை பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு மாநகர முதல்வர் யோகேஸ்வரி திங்கட்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடினார். (more…)

சட்டவிரோதமாக மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க படையினரும் பொலிஸாரும் முன்வரவேண்டும் என்று யாழ்.மாவட்ட வன அதிகாரி கே.யோகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விசேட சட்டமூலம் இன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணியின்போது அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்கு வன விரிவாக்கல் திட்டத்தின் கீழ் வனவளத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. (more…)

வடமராட்சி கிழக்கு சக்கோட்டைப்பகுதியில் இயங்காது இருந்த கடுவாடு பதனிடும் நிலையத்தினை மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)

வீதி அகலிப்புக்காக தாவடி காங்கேசன்துறை வீதியில் உள்ள ஐயப்ப சுவாமிகள் கோவில் இடிக்கப்பட்டுள்ளது. (more…)

சாரதிப்பயிற்சிப்பாடசாலைகளில் பயிற்சிகளை வழங்கும் பயிற்றுவிப்பார்கள் மிகவும் நுணுக்கமான முறையில் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)

2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது. (more…)

சுன்னாகம் மயிலணிப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வடமராட்சியில் அல்வாய் பகுதியில் இரண்டு வயதுக் குழந்தையை பணயம் வைத்து, 22 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்திற்கு அதிகம் பெறுமதியான இரண்டு கையடக்கத் தொலைபேசி, 60 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)

13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

பாடசாலை விட்டு கணவரின் வரவுக்காக வீதியில் காத்திருந்த ஆசிரியையின் நகைகள் அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று மானிப்பாய் தாவடியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

ஊஞ்சலில் கட்டியிருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று தெல்லிப்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் தனுசன் (வயது 8) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளை 19ஆம் திகதி 1 மணித்தியாலய பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார். (more…)

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விரைவு அனுமதி வழங்கும் சேவைப்பிரிவு நேற்று திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். (more…)

தெற்கில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஒரு நாள் கடற்றொழில் ஈடுபடாமல் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். குருநகர் கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts